பருவமழை

Posted: August 21, 2014 in கவிதை

நீருள்ளி முள் நிறைந்து கிடக்கிறது
நாற்றாங்கால் எங்கும்
எருக்குழியில் முளைத்து கிளைபரப்பிவிட்டது ஆமணக்கு
குளத்து வெட்டுக்கிடங்கு மட்டும்
நிறைந்துள்ளது நேற்றைய மழையில்
விதைநெல் உலர்ந்து கிடக்கிறது
வீட்டு முற்றத்தில்
நாற்றுப்பாவ குளம் நிரம்ப வேண்டும்
குளம் நிரம்புமா இல்லையா
என்று குளக்கரை வடக்குத்தி அம்மனுக்கு பூ கட்டி போட்டதில்
வெள்ளைப்பூ விழுந்ததால்
முற்றத்து நெல்லை முணிந்து
பரணில் போட்டுவிட்டான் தங்கப்பழம்..!!

Leave a comment