நீருள்ளி முள் நிறைந்து கிடக்கிறது
நாற்றாங்கால் எங்கும்
எருக்குழியில் முளைத்து கிளைபரப்பிவிட்டது ஆமணக்கு
குளத்து வெட்டுக்கிடங்கு மட்டும்
நிறைந்துள்ளது நேற்றைய மழையில்
விதைநெல் உலர்ந்து கிடக்கிறது
வீட்டு முற்றத்தில்
நாற்றுப்பாவ குளம் நிரம்ப வேண்டும்
குளம் நிரம்புமா இல்லையா
என்று குளக்கரை வடக்குத்தி அம்மனுக்கு பூ கட்டி போட்டதில்
வெள்ளைப்பூ விழுந்ததால்
முற்றத்து நெல்லை முணிந்து
பரணில் போட்டுவிட்டான் தங்கப்பழம்..!!
0