வாழ்வாதாரம்

Posted: November 25, 2014 in கவிதை

செங்காந்தள் மலர் படந்துள்ள கள்ளி வேலிக்கும்
ஆம்பல் மிதக்கும் நீள்வட்ட குட்டைக்குமிடையில்
கருந்துளசி,கொளிஞ்சிச் செடிகளோடு மண்டிக்கிடக்கிறது குறுந்தட்டி
வருடா வருடம் குறுந்தட்டிவேரையும்
கண்ணுவலிக் கிழங்காகிய செங்காந்தள் வேரையும்
விற்க வெட்டிச்சென்றாலும்
பூமித்துகளின் ஏதோ ஒரு மூலையில்
அதன் எச்சம் ஒட்டிக்கிடப்பதாலேயே
கல்லுடைப்பே ஜீவனாய் வாழும்
கீழச்செவல் கருப்பசாமிக்கு
குவாரியில் நீர் பெருகி கல்லுடைப்பற்ற
இந்த மழைக்கால மாதத்தின்
வாழ்வாதாரம் தளிர்க்கிறது

Leave a comment